திங்கள், ஆகஸ்ட் 08, 2011

வேனக் கட்டுக்கு NO 1 வீட்டு மருந்து




வேனக் கட்டுக்கு NO 1 வீட்டு மருந்து

  இதை என் அனுபவ பூர்வமா உபயோகிச்சி பார்த்து இதை உங்களிடம் பகிர்கிறேன். இங்கு சரியான சூடு நேரம் என் காலில் இந்த கட்டு வந்தது வலியா இருந்தது, அப்ப தூத்துக்குடி நண்பர் இந்த மருந்தை சொன்னார். சின்ன வெங்காயம் இரண்டு மற்றும் குழம்பு மஞ்சள் ஒரு 1/4 ஸ்பூன் சின்ன வெங்காயத்தை லேசா இடிச்சி கொள்ளவும் பின்பு ஒரு குண்டு கரண்டியில் அந்த வெங்காயத்தை போட்டு பின்பு மஞ்சள் தூளை சேர்த்து கொஞ்சமா நீர் சேர்க்கவும் சேர்த்த பின் அடுப்பில் அந்த கரண்டியை சூடு பண்ணவும் சூடு ஆன பின்பு அது பசை மாதிரி ஆகிவிடும் அவ்வளவுதான் லேசான சூடா இருக்கும் பொழுது அதை கட்டு மேல் வைத்து காட்டன் துணி வைத்து கட்டவும். அரைமணி நேரத்தில் வலி குறைந்து விடும். தூங்கும் முன்பு வைத்து கட்டிவிட்டு தூங்கவும், ஒரு நாளைக்கு இரண்டு தடவை வைத்து கட்டவும்.மூண்று நான்கு நாளில் சரி ஆகிவிடும் .  (சூடு நேரத்தில் கட்டியா வரும் சலம் வச்சிருக்கும் அதுக்கு பேர்தான் வேனக் கட்டு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக